காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா
உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாத்து பசும் பொண்ணு
உள்ளம் மயங்கிட வந்திடுங்க
உடனே எல்லாம் தந்திடுங்க
காக்கா காக்கா மை கொண்டா
கல்லை கையால் தொட மாட்டான்
தொல்லை எதுவும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லதை என்றும் செய்திடுவான்
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா
காக்கா காக்கா மை கொண்டா
சாப்பிட உங்களை கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
துடுக்காய் ஓடி வந்திடுங்க
காக்கா காக்கா மை கொண்டா
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment