Thursday, July 15, 2010

தாலேலோ

கண்ணே, கண்மணியே
கையமுதே தாலேலோ
பண்ணே, பாடுங்குயிலே
பால்நிலவே தாலேலோ

மயிலே, மாங்கனியே
மரகதமே தாலேலோ
குயிலே, குலக்கொழுந்தே
குண்டுமணியே தாலேலோ.

தேனே, திருவிளக்கே
தீஞ்சுவையே தாலேலோ
மானே, மருக்கொழுந்தே
மாதவமே தாலேலோ.

No comments: